அல்குர்ஆன் தர்ஜுமாக்களை புதிய விளக்கங்களுடன் வெளியிடுவதற்கு சிபாரிசு செய்துள்ள முஸ்லிம் திணைக்கள குழு

Date:

2024.05.16 ஆம் தேதி புனித மக்காவில் வசிக்கின்ற இலங்கையரான சாதிக் ஹாஜியாரினால் அனுப்பி வைக்கப்பட்ட 15,000 குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகளும் இன்று வரை சுங்கத்திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

அல்குர்ஆனின் சிங்கள தமிழ் மொழி மூல மொழிபெயர்ப்புகளுடன் 20,000 அல்குர்ஆன் பிரதிகளும் இன்னும் சில இஸ்லாமிய நூல்களும் அடங்கிய கொள்கலன் 2024.06.22 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்திருந்தது இதில் அல்குர்ஆன் பிரதிகளைத் தவிர ஏனைய நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் இருந்து வெளிவராமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

அல் குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களையும் ஏனைய நூல்களையும் வெளியில் எடுப்பதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீடுகள் குழு சிபாரிசு வழங்கியிருக்கவில்லை.

இந்நிலையில் அல்குர்ஆனின் தமிழ் சிங்கள தர்ஜுமாக்களில் மேலதிக விளக்கங்களை அடிக்குறிப்பிட்டு வெளியிடுவதற்கு முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் நூல் விமர்சன மற்றும் வெளியீட்டுக் குழு சிபாரிசு செய்துள்ளதாக தெரிய வருகிறது

குறித்த சிபாரிசு பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தினால் புத்த சாசன சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...