துருக்கி ஜனதிபதி அர்தூகானுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

Date:

துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திங்களன்று பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

தொலைபேசி உரையாடல் மூலம் பேசிய துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ட்ரம்பை நாட்டுக்கு வருகை தருமாறு அழைத்தார்.

ட்ரம்பிடம் பாதுகாப்புத் துறைத் துறையில், வாஷிங்டனுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு துருக்கி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், காசாவில் மனிதாபிமான நெருக்கடி ‘மோசமான நிலையை’ எட்டியுள்ளது, உதவி வழங்குவதற்கும் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கும் துருக்கியின் தயார்நிலையை  அர்தூகான் ட்ரம்பிடம் வெளிப்படுத்தினார்.

போர்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் அணுகுமுறைக்கு ஆதரவை வெளிப்படுத்திய அர்தூகான், ஈரானுடனான பேச்சுவார்த்தை செயல்முறையிலும் ரஷ்யா-உக்ரைன் போரை தீர்ப்பதிலும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை துருக்கி பாராட்டுவதாகக் கூறினார்.

சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அதன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் துருக்கி பாடுபடுவதாக அர்தூகான் மேலும் கூறினார். இந்த செயல்முறைக்கு பங்களிக்க சிரியா மீதான தடைகளை தளர்த்துவதற்கான அமெரிக்க முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....