காத்தான்குடி நகர சபையில் மு.கா. ஆட்சியமைப்பு – தவிசாளராக அஸ்பர்

Date:

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் 10 ஆசனங்களை வென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெரும்பான்மைப் பலத்துடன் காத்தான்குடி நகர சபையில் ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளராக எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசாளராக எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்கு அறிவித்துள்ளார்.

தவிசாளர் சாஹுல் ஹமீத் முஹம்மத் அஸ்பருக்கான நியமனக் கடிதத்தை கட்சியின் செயலாளர் கட்சித் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் முன்னிலையில் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நேற்று (14) மாலை கையளித்தார்.

காத்தான்குடி நகர சபையின் 18 ஆசனங்களில் ஸ்ரீ ல மு கா 10, NPP 3, ஐக்கிய மக்கள் சக்தி 1, NFGG 2, இலங்கை தொழிலாளர் கட்சி 1, சுயாதீனக் குழு 1 ஆசனங்களை வென்றிருந்தன.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...