சிக்குன்குனியாவின் பரவல் தீவிரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

Date:

இலங்கையில் தற்போது சிக்குன்குனியாவின் பரவல் தீவிரமாகியுள்ளது. முக்கிய நகர்ப்புறங்களில் இது வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த வைரஸின் மிகக் கடுமையான மீள் எழுச்சியைக் குறிக்கிறது.

கடவத்தை, கொத்தொடுவ, பத்தரமுல்லை மற்றும் கம்பஹாவின் நெரிசலான பகுதிகள் ஆகியவை அதிகம் ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

காய்ச்சல், மூட்டு வலி, குளிர் மற்றும் உடல் வலிகள் இதன் பொதுவான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சில நோயாளிகளில், மூட்டு வலி வாரக்கணக்கில் நீடிக்கும்.

இந்த வைரஸ் நுளம்பு கடித்தால் பரவுகிறது, ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதன் மூலம் அல்ல. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இது தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதேவ‍ேளை, இலங்கையில் சிக்குன்குனியா ஒரு சுகாதார ஆபத்து என்று கூறி, அமெரிக்காவும் இங்கிலாந்தும் தங்கள் பயண எச்சரிக்கைகளை புதுப்பித்துள்ளன.

மேலும், நோய் பரவுவதைத் தடுக்க, மேல் மாகாணத்தில் ஒரு வார கால டெங்கு மற்றும் கொசு கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...