பலஸ்தீன் ஜனாதிபதி லெபனான் விஜயம்: இஸ்ரேலை தாக்குவதை நிறுத்துமாறு லெபனானை கோருவார் என எதிர்பார்ப்பு

Date:

பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மே 19 ஆம் திகதி லெபனானுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நிறுத்தக்கோருவார் என பலஸ்தீன் மற்றும் லெபனானிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

லெபனான் முகாம்களிலிருக்கும் மஹ்மூத் அப்பாஸின் பத்தா இயக்க பிரிவினரும் பலஸ்தீனின் ஏனைய பிரிவினரும் ஆயுதங்களை களைய வேண்டும் என இருநாட்டு தலைவர்களும் வேண்டுகோள் விடுப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முகாம்களில் உள்ள பத்தா பிரிவினரின் ஆயுதங்களை களைவதற்கு ஏற்கனவே தீர்மானித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1948இல் இஸ்ரேலினால் வெளியேற்றப்பட்ட 7 இலட்சத்து 50,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களில் கனிசமானவர்கள் லெபனான் முகாம்களில் தங்கியுள்ளனர்.

இவர்களில் பத்தா, ஹமாஸ், பலஸ்தீன விடுதலைக்காக முற்போக்கு முன்னணி (PFLP) போன்ற குழுக்கள் முகாம்களிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் இயங்கி வந்திருக்கின்றன.

இந்நிலையிலேயே ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் விஜயத்தின் போது இவர்களின் ஆயுதங்களை களைவதற்கான அறிவித்தல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே மஹ்மூத் அப்பாஸ் ஹமாஸ் இயக்கத்தினரை ‘நாய்களே ஆயுதங்களை களையுங்கள்’ என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...