இலங்கையிலிருந்து பாகிஸ்தானின், லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்!

Date:

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரின் காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களிலும் இந்தியாவுக்கு செல்லும் விமானங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

லாகூர் விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள், மறு அட்டவணை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான கூடுதல் தகவலுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கேட்டுக் கொண்டது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...