இலங்கையிலிருந்து பாகிஸ்தானின், லாகூர் செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்!

Date:

பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்து வரும் போரின் காரணமாகவே இலங்கை விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின், கராச்சிக்கு செல்லும் விமானங்களிலும் இந்தியாவுக்கு செல்லும் விமானங்களிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

லாகூர் விமானங்களில் முன்பதிவு செய்த பயணிகள், மறு அட்டவணை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான கூடுதல் தகவலுக்கு விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கேட்டுக் கொண்டது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...