பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உயிருக்கு அச்சுறுத்தல்: விசாரணைகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்

Date:

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட இலங்கை அரசியல்வாதிகளுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் ஒன்றை பிரதமர் அலுவலகத்திற்கு வந்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளர் இது தொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்.

மின்னஞ்சல் தொடர்பாக கூகுளிடம் இருந்து அறிக்கை கோரியுள்ளோம்.எங்களுக்கு அறிக்கை கிடைத்துள்ளது. மின்னஞ்சலின் ஐபி முகவரி நெதர்லாந்து மற்றும் ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாது.

இது தொடர்பான முறையான அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கையைப் பெற்ற பின்னர், நாங்கள் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைப்போம்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பது குறித்து, ஆகஸ்ட் 2024 இல் அமைச்சின் அவசர தொலைபேசி எண் மூலம் முறைப்பாடு பெறப்பட்டது.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘லோகு பட்டியின்’ கூட்டாளி ஒருவர் செய்து வருவதாக முறைப்பாடு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்த முறைப்பாடு குறித்தும் நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தகவல் அளித்தவர் அளித்த உண்மைகள் தவறானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. முறைப்பாடு அளிக்கப்பட்ட மொபைல் எண்ணிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

முறைப்பாடு தொடர்பான உண்மைகள் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...