முஸ்லிம்கள் பிற மதவழிபாடுகளுடன் தொடர்புபடுவதும் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இஸ்லாமிய வழிமுறையல்ல – உலமா சபை

Date:

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  இஸ்லாமிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண மார்க்கமாகும். அது உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் பரப்ப வந்த மார்க்கமாகும்.

மேலும், இம்மார்க்கம் தனி மனிதர்களுக்கும் மனித குலத்திற்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்துவதை அதன் உயரிய குறிக்கோள்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது.

மேலும், இஸ்லாம் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலக சமாதானத்தையும் மனித இன ஐக்கியத்தையும் வலியுறுத்துகின்றது.

எமது தாய்நாடான இலங்கை பல இனத்தவர்களும் பல சமூகங்களும் வாழும் நாடாகும். இங்கு வாழும் பிற சமயத்தவர்களுடன் அன்போடு பழகி அவர்கள் மத்தியில் உள்ள ஏழைகள், விதவைகள், நோயாளிகள், அங்கவீனர்கள் போன்றோருக்கு உதவி செய்வதையும் அவர்களது மத வழிபாடு தொடர்பான அனுஷ்டானங்களுடன் சம்பந்தப்படாத விடயங்களில் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதையும் இஸ்லாம் வரவேற்கின்றது. இதுவே இஸ்லாம் கூறும் சகவாழ்வாகும்.

எனினும், சகவாழ்வு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் பிற சமயத்தவர்களின் வணக்க வழிபாடுகளுடன் தொடர்புபடும் மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய மத நிகழ்வுகளில் கலந்துகொள்வதும் இஸ்லாமிய வழிமுறையல்ல. இன்னும் ஏனைய மதங்களின் நடைமுறையிலும் இவை காணப்படுவதில்லை.

ஆகவே, முஸ்லிம்கள் தமது இறை நம்பிக்கை (ஈமான்) க்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதை தவிர்ந்து நடந்துகொள்ளுமாறும் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது ஆலிம்களின் வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் நிறைவேற்று குழு மற்றும் ஃபத்வாக் குழு அனைத்து முஸ்லிம்களையும் வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...