புதிய கொவிட்-19: வைத்தியசாலைகளில் PCR பரிசோதனைகள்..!

Date:

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட்டுள்ள உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு, பி.சி.ஆர். பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் சில வைத்தியசாலைகளில் இப்பரிசோதனைகள் மிக மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளதாவது,

கொவிட் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் சோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பி.சி.ஆர். பரிசோதனை வசதிகளுள்ள வைத்தியசாலைகள், தற்போது இந்தச் சோதனைகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

வைத்தியசாலைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகள் தொடர்பிலான கண்காணிப்பை அதிகரிக்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகள் சிலவற்றில் தற்போது பரவிவரும் புதிய கொவிட் தொடர்பில் இலங்கை தொடர்ந்தும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

ஆனால், உடனடியாக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...