போலந்து வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகை

Date:

போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski), இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை இலங்கை வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வரவேற்றார்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைத்துவத்தை வகிக்கும் போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் உத்தியோகப்பூர்வ சந்திப்பை நடத்த உள்ளார்.

இந்த விஜயத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும், மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துவதுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து  வெளிவிவகார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்பதோடு இலங்கையின் பல்வேறு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...