கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றம் ஏற்பாட்டில் பேருவளை ஜாமியா நளீமியா உயர் கலாபீடத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாநிதி மர்ஹூம் எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் மே 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 09, தெமட்டகொட தாருல் ஈமான் அறக்கட்டளையின் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு முஸ்லிம் கல்வி மன்றத்தின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைநெறியின் முன்னாள் பீடாதிபதியும் பேராசிரியருமான எம்.எஸ்.எம். ஜலால்தின் தலைமை தாங்குவார்.
அத்துடன் இன்னும் பல அறிஞர்களுடைய சிறப்பு உரைகளும் இந்த நிகழ்வின் போது இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் விசேட அம்சமாக கலாநிதி சுக்ரி அவர்களைப் பற்றின் நூல்களும் இலவசமாக வழங்கி வைக்கப்படடவுள்ளன.