மிகவும் பிஸியான நிகழ்ச்சி நிரலுடன் கத்தாரை அடைந்த டிரம்ப்!

Date:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று புதன்கிழமை தனது வளைகுடா பயணத்தின் இரண்டாவது கட்டமாக கத்தாரின் தலைநகர் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் ஆல்தானியினால் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இப் பயணம், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து, கத்தார் அமீரரின் அரண்மனையில் இருக்கும் அல்ஜஸீரா நிருபர் வஜத் வக்பி தெரிவிக்கையில்,

வளைகுடாவில் ஒரு மாற்றம் நிகழும் சூழலிலும் அமெரிக்காவின் புதிய அதிபர் இப்பகுதியில் இறங்கியுள்ள காரணத்தினாலும் இது முக்கியமானதாகும். டிரம்பின் , பாரம்பரிய அமெரிக்க முறைகளை விட வித்தியாசமான ஒரு நடைமுறையை மேற்கொள்கிறார்.

வஜத் மேலும் கூறுகையில், இஸ்ரேலைத் தவிர்த்து தனியாகவே சில முக்கிய விடயங்களில் டிரம்ப் முடிவுகளை மேற்கொள்கிறார்.

உதாரணமாக, அவர் இஸ்ரேலின் அனுமதியின்றி ஈரானுடன் உரையாடலை மேற்கொண்டுள்ளார், சிரியாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தனிப்பட்ட முறையில் நீக்கியுள்ளார். இதனால் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே பதற்றம் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

டிரம்ப், டோஹாவில் உள்ள அமீர் அரண்மனைக்கு செல்லும் போது பாரம்பரிய கத்தாரி இசையுடன் வரவேற்கப்பட்டார். அவரது பயணத் திட்டத்தில் இரு நாட்டு உச்சி மாநாடு, தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் லூசைல் அரண்மனையில் நடைபெறும் ஒரு உத்தியோகபூர்வ விருந்தோம்பல் போன்ற நிகழ்ச்சிகளும் அடங்கும்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...