நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் !

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள  தீவிர வானிலை காரணமாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில்,

வியாழக்கிழமை (29) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை (31) காலை 8 மணி வரையான 36 மணிநேரத்தில், மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 31 வீதமான மின்தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளன என்றார்.

மின்தடைகள் குறித்து 1987 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...