வக்பு சொத்து தகராறு: புத்தளம் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் மீது தாக்குதல்!

Date:

புத்தளம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வக்பு சொத்துக்களை கையாளுவதற்கு வக்பு சபையால் விசேடமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர் சபை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் வக்பு சொத்து விபரங்களை ஆவணப்படுத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு (01) நம்பிக்கையாளர் சபை தலைவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

புத்தளம் பெரியபள்ளிவாலுக்கு வக்பு செய்யப்பட்ட கடைகளை வாடகைக்கு பெற்றவர்களில் சிலர் வக்பு சொத்துக்களை மோசடி செய்ததாக வெளிவந்த குற்றச்சாட்டுக்களையடுத்து வக்பு சொத்துக்களை கையாளும் பணி கடந்த வருடம் விசேட நம்பிக்கையாளரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வக்பு செய்யப்பட்ட கடையென்றை வாடகைக்கு பெற்றிருந்த ஒருவராலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...