தனது 125 வருடகால வரலாற்றை நினைவுகூர்ந்த நீர்ப்பாசனத் திணைக்களம்: புத்தளத்தில் சர்வ மதத்தலைவர்களின் பிரசன்னத்துடன் சிறப்பான வைபவம்!

Date:

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு புத்தளம் நீர்ப்பாசன பொறியியல் அலுவலக வளாகத்தில் கடந்த மே 29ல் நீர்ப்பாசன இயக்குநர் பொறியாளர், திருமதி, டி.எஸ்.என். ஜெயமான்ன தலைமையில் நடைபெற்றது.

சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வத உரைகளுடன் நிகழ்வு தொடங்கியது. இதில் புத்தளம் புனித மேரி தேவாலயத்தின் மீசம் அருட்தந்தை திலங்க நிர்மான் , ஹிந்து கோயிலின் குருக்கள் மற்றும் சர்வ மத குழு உறுப்பினரும் பஹன மீடியாவின் இயக்குனருமான அஷ்ஷேக். எம்.எஸ். அப்துல் முஜீப் (கபூரி) ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் ஆசிச் செய்திகளை வழங்கினர்.

நிகழ்வின்போது நீர்ப்பாசனத் திணைக்களம் கடந்த 125 ஆண்டுகளில் நாட்டிற்கு வழங்கிய முக்கியமான சேவைகள் நினைவுகூரப்பட்டதுடன், திணைக்களத்தின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாக உறுப்பினர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பும் நினைவு கூறப்பட்டது.

இஸ்லாம் சார்பாக உரையாற்றிய அஷ்.அப்துல் முஜீப் , இஸ்லாமிய கண்ணோட்டத்தில் நீர்ப்பாசனத் துறை ஒரு பொறுப்பு, நிலத்தை வளப்படுத்தாமல் வைப்பது குற்றம், அதனை வளப்படுத்துவது தர்மம், மன்னர்கள் காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் நெல் உற்பத்தியில் சிறந்து காணப்பட்டமை ஆகிய அம்சங்கள் குறித்து விளக்கினார்.

125வது ஆண்டு நிறைவு நினைவாக, அன்றிரவு முழுவதும் புத்தளம் கல்லடி விகாரையின் விகாராதிபதி கெளரவ  நவகமுவே மேதானந்த தேரர் தலைமையில் பிரித் ஓதும் நிகழ்வு நடைபெற்றது.

இவ் வழிபாட்டு நிகழ்ச்சியில், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

125 வருட நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந் நிகழ்வில், நீர்ப்பாசன இயக்குநர் ஜெனரல் பொறியாளர் ஏ. குணசேகர, மேலதிக இயக்குநர் ஜெனரல் பொறியியலாளர் ஏ.கே. சந்திரலதா, புத்தளம் பிரிவு தலைமை பொறியியலாளர் ஆர்.எம்.ஏ.ஆர். பண்டார, பொறியியலாளர் ஜெனரல் ஜே. பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், பொறியாளர் எஸ்.கே.ஏ.எஸ். சதுரங்க, எம்.என்.என். சுஜாவ், ஜே.ஏ.சி.எல். ரணசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...