ஹஜ் 2025: இலங்கை ஹாஜிகளுக்கான ஹஜ் ஏற்பாடுகளை தூதுவர் அமீர் அஜ்வத் நேரில் சென்று ஆராய்வு

Date:

இவ்வாண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கும் இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், சேவை வழங்குநரோடு கலந்துரையாடி ஆய்வு செய்தார்.

இவ்வாண்டு இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி அரேபியா வருகை தரும் 3,500 ஹாஜிகளுக்கான சேவைகளை ‘அல் பைத்’ விருந்தாளிகள் (Al Bait Guests) எனும் நிறுவனம் வழங்குகிறது.

‘அல் பைத் கெஸ்ட்ஸ்’ 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் மிகப்பெரிய ஹஜ் சேவை வழங்குநர்களில் ஒன்றாகும்.

அல் பைத் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி உசாமா அப்துல்லதீபுக்கும் இலங்கைத் தூதுவருக்குமிடையில் மக்காவில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஹஜ் கடமைகளை நிறைவேற்றும் போது இலங்கை ஹாஜிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைகள் மற்றும் ஏற்பாடுகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

இச்சந்திப்பின் போது ஜித்தாவில் உள்ள இலங்கை கொன்ஸ்சல் ஜெனரல் காரியாலயத்தின் மூன்றாம் செயலாளர் சிப்லி மற்றும் ஹஜ் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி அஷ்ரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...