20,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; ஏழு பேர் உயிரிழப்பு

Date:

வருடத்தின் ஐந்து மாத காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, இக்காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்  விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போப் 14ம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி விஜயம்.

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக துருக்கி நாட்டுக்கு...

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்!

தெதுரு ஓயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதால் இன்று (27) அல்லது நாளை...

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என...

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...