20,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; ஏழு பேர் உயிரிழப்பு

Date:

வருடத்தின் ஐந்து மாத காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, இக்காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்  விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...