20,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்; ஏழு பேர் உயிரிழப்பு

Date:

வருடத்தின் ஐந்து மாத காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மாத்திரம் 2,178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

இந்நிலையில், டெங்கு ஒழிப்பு விசேட வேலைத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாவதாகவும் அந்தப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

மேல் மாகாணத்திலேயே அதிகளவு டெங்கு நோயளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, இக்காலப் பகுதியில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 640 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தில் 386 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர்  விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...