48 மணிநேரத்தில் பலியாகப்போகும் 14,000 குழந்தைகள்: காசாவிற்குள் நுழைய சுமார் 100 உதவி லாரிகளுக்கு மட்டுமே அனுமதி;

Date:

காசா பகுதிக்குள் சுமார் 100 மனிதாபிமான உதவிகளைக் கொண்ட லாரிகள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜென்ஸ் லார்க் இந்த தகவலை வெளியிட்டார்.

“இது, நேற்று நுழைய அனுமதிக்கப்பட்ட ஒன்பது லாரிகளுடன் ஒப்பிடுகையில், மிகப்பெரிய முன்னேற்றமாகும்,” என அவர் தெரிவித்தார்.

இந்த லாரிகளில் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் மற்றும் சத்தான உலர் உணவுகள் அடங்கியுள்ளன என்றும், அவை அடுத்த கட்டமாக சேகரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள  அமைப்புகள் வழியாக காசா மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த முன்னேற்றம், தொடர்ந்த மனிதாபிமான நெருக்கடிக்குள்ளாகியுள்ள காசா மக்களுக்கு தற்காலிக நிம்மதியாக அமையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

முன்னதாக காசாவுக்கு தினமும் 500 லாரிகளின் மனிதாபிமான அடிப்படையில் பொருட்கள் காசாவுக்குள் சென்றன. ஆனால் இப்போது லாரிகளின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்தள்ளது.

இதனால் காசா மக்கள் உதவிகள் இன்றி தவித்து வருகின்றனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பசி, பட்டினியால் வாடுகின்றன. சிகிச்சைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன.

இதுபற்றி காசாவில் வசிக்கும் மக்கள் கூறுகையில், ‛‛எங்கள் குழந்தைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு துண்டு ரொட்டி கூட கிடைக்கவில்லை. அரிசி, மாவு, காய்கறிகள் என்று எந்த உணவு பொருட்களும் எங்களுக்கு கிடைக்காத நிலை உள்ளது” என்றார்.

காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்றைய தினம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 38 பேர் பலியாகினர்.   காசாவுக்கு வழங்கப்படும் நிவாரண பொருட்கள் இன்னும் 48 மணிநேரத்தில் சென்றடையாவிட்டால் அங்கு 14 ஆயிரம் குழந்தைகள் இறப்பார்கள் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...