உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நிறைவு

Date:

மே மாதம் 9,10,11 ஆம் திகதிகளில் தமிழ்நாடு திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இனிதே நிறைவுற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸடாலின் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகளும் கருத்தரங்குகளும் இடம்பெற்றன.

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட கடல் கடந்த நாடுகளில் உள்ள பேராளர்களும் இலக்கியவாதிகளும் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இறுதிநாள் நிகழ்வின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர்  காயல் மகபூத் அவர்களுக்கு அவருடைய இலக்கிய பணிகளுக்காக இலக்கியச் சுடர் விருது வழங்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான கே.என். பாஷா, ஜி.எம். அக்பர் அலி  ஆகியோர் இவ்விருதை வழங்கினார்.

இம்மூன்று நாள் மாநாட்டில் முஸ்லிம் மீடியோ போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...