குற்ற செயல்களுக்கான காரணங்களை கண்டறிய விசேட திட்டம்!

Date:

அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட பல குற்றச் செயல்கள் பதிவாகும் தென் மாகாணத்தில், அவ்வாறான குற்றச் செயல்களுக்கான காரணங்களைக் கண்டறிவதற்காக விசேட அறிவியல் ஆய்வுகளை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஆய்வு நடவடிக்கையின் பின்னர் அவ்வாறான குற்றங்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...