சுதந்திர பலஸ்தீனம் என்ற நிலைப்பாட்டில் இலங்கை உறுதியாக உள்ளது: அமைச்சர் பிமல்

Date:

இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென முறித்துக் கொண்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் காரணமாக, இலங்கை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் இந்தத விடயத்தை தெரிவித்தார்.

இலங்கை இஸ்ரேலுடனான உறவை திடீர் என துண்டித்தால்,பொருளாதாரம் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும், இதன் காரணமாக இஸ்ரேலில் வேலைபார்க்கும் பல இலங்கையர்கள் வேலையை இழக்கும் நிலையேற்படும்.எங்களால் இதனை செய்ய முடியாது.

சவூதி அரேபியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளைப் போலவே  நாங்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவளிப்போம் ஆனால் இராஜதந்திர பொருளாதார தேவைகளிற்காக இஸ்ரேலுடன் உறவை பேணுவோம்.

பலஸ்தீனிய விவகாரத்திற்காக இலங்கை இஸ்ரேலுடனான பொருளாதார இராஜதந்திர உறவினை துண்டித்தால், அது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாங்கள் சுதந்திர  பலஸ்தீன தேசம் சுதந்திர இஸ்ரேல் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றோம், இரண்டையும் வேறுவேறு அரசாங்கங்களாக நாங்கள் கருதுகின்றோம்,

இலங்கை சுதந்திர பலஸ்தீன தேசம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது இஸ்ரேல் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொலை செய்வதை கண்டிக்கின்றது.என்றார்

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...