முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்க அசாம் மாநிலம் தீர்மானம்..!

Date:

பங்களாதேஷ் எல்லைக்கு அருகாமையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களிலுள்ள சுதேசிகளுக்கு ஆயுத லைசென்ஸ் வழங்குவதற்கு அசாம் மாநிலம் தீர்மானித்துள்ளது.

சுதேச மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தெரிவித்தார்.

அசாமின் 35 மாவட்டங்களில் 11மாவட்டங்களில் முஸ்லிம்கள் செறிந்து வழ்கின்றனர். அவற்றுள் 4 மாவட்டங்கள் பங்களாதேஷ் எல்லைக்கு அருகில் இருக்கின்றன. தற்போது 6 மாவட்டங்களில் உள்ள சுதேசிகளுக்கு ஆயுதம் வைத்திருப்பதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

சுதேசிகளின் நீண்டகால கோரிக்கைக்கு பின்னர் இந்த ஆயுத லைசென்ஸுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

பங்களாதேஷ் எல்லைக் கிராமங்களில் பங்களாதேஷிலிருந்து குடியேறிய அநேகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...