இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கிடையே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.
இதுதொடர்பான அறிக்கையில், “இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகளின் தீவிரத்தை உணர்ந்து, சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை வெளிப்படையாக மீறியதற்காக அதை பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்” என்று சர்வதேச சமூகங்களுக்கு ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்தார்.
மேலும், “பாகிஸ்தான் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் அமைதிக்கு உறுதிபூண்டுள்ளது, மேலும் அதன் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஒருபோதும் மீற அனுமதிக்காது.
அதன் பெருமைமிக்க மக்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய அனுமதிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
இந்தியாவின் கொடிய தாக்குதல்களை பாகிஸ்தான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. அவற்றை போர் நடவடிக்கைகள் என்று அறிவிக்கிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்திய இராணுவத்தால் அப்பாவி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைப்பது ஒரு கொடூரமான மற்றும் வெட்கக்கேடான குற்றமாகும், இது மனித நடத்தையின் அனைத்து விதிமுறைகளையும் சர்வதேச சட்டத்தின் விதிகளையும் மீறுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.