பலஸ்தீன திருமண விழாவை முற்றுகையிட்ட இஸ்ரேலிய இராணுவம்: குழந்தைகள் உட்பட பலர் காயம்

Date:

தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள பெடோயின் நகரமான லகியாவில், ஒரு பலஸ்தீன குடும்பத்தில் நடைபெற்ற திருமண விழாவுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் திடீரென நுழைந்தது. விழா நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட திடீர் இராணுவ சோதனையால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இராணுவத்தினர் மணமகனையும் அவரது தந்தையையும் கைது செய்ததுடன், விழா நிகழ்வுகளில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

விழா நடந்த இடத்தில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி தங்கள் நடவடிக்கையை இராணுவம் நியாயப்படுத்தியது. விழா நடந்து கொண்டிருந்தபோது, குழந்தைகள் உட்பட பலரை சிதறடையச் செய்யும் வகையில் அதிகாரிகள் ஸ்டன் கையெறி குண்டுகளை வீசியதாக பலஸ்தீனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுகளால் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.

நெகேவ் பிராந்தியத்தில் சுமார் 300,000 இஸ்ரேலிய-பலஸ்தீனர்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பெடோயின் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதில் சுமார் 100,000 பேர் இஸ்ரேல் அரசு சட்டவிரோதமாகக் கருதும் 35 அங்கீகரிக்கப்படாத கிராமங்களில் வாழ்கின்றனர்.

இவ்வாழ்விடங்களுக்கு இஸ்ரேல் அரசு மின்சாரம், தண்ணீர், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளை வழங்க மறுத்துவருகிறது.

https://web.facebook.com/reel/649257291272263

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...