மிகவும் பிஸியான நிகழ்ச்சி நிரலுடன் கத்தாரை அடைந்த டிரம்ப்!

Date:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று புதன்கிழமை தனது வளைகுடா பயணத்தின் இரண்டாவது கட்டமாக கத்தாரின் தலைநகர் டோஹாவுக்கு வருகை தந்துள்ளார். கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் ஆல்தானியினால் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இப் பயணம், இருநாடுகளுக்கிடையிலான உறவுகள் வலுவாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இப் பயணத்தின் முக்கியத்துவம் குறித்து, கத்தார் அமீரரின் அரண்மனையில் இருக்கும் அல்ஜஸீரா நிருபர் வஜத் வக்பி தெரிவிக்கையில்,

வளைகுடாவில் ஒரு மாற்றம் நிகழும் சூழலிலும் அமெரிக்காவின் புதிய அதிபர் இப்பகுதியில் இறங்கியுள்ள காரணத்தினாலும் இது முக்கியமானதாகும். டிரம்பின் , பாரம்பரிய அமெரிக்க முறைகளை விட வித்தியாசமான ஒரு நடைமுறையை மேற்கொள்கிறார்.

வஜத் மேலும் கூறுகையில், இஸ்ரேலைத் தவிர்த்து தனியாகவே சில முக்கிய விடயங்களில் டிரம்ப் முடிவுகளை மேற்கொள்கிறார்.

உதாரணமாக, அவர் இஸ்ரேலின் அனுமதியின்றி ஈரானுடன் உரையாடலை மேற்கொண்டுள்ளார், சிரியாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளை தனிப்பட்ட முறையில் நீக்கியுள்ளார். இதனால் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இடையே பதற்றம் உருவாகலாம் எனவும் கூறப்படுகிறது.

டிரம்ப், டோஹாவில் உள்ள அமீர் அரண்மனைக்கு செல்லும் போது பாரம்பரிய கத்தாரி இசையுடன் வரவேற்கப்பட்டார். அவரது பயணத் திட்டத்தில் இரு நாட்டு உச்சி மாநாடு, தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் லூசைல் அரண்மனையில் நடைபெறும் ஒரு உத்தியோகபூர்வ விருந்தோம்பல் போன்ற நிகழ்ச்சிகளும் அடங்கும்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...