நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் !

Date:

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள  தீவிர வானிலை காரணமாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவிக்கையில்,

வியாழக்கிழமை (29) இரவு 8 மணி முதல் சனிக்கிழமை (31) காலை 8 மணி வரையான 36 மணிநேரத்தில், மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபைக்கு 55,940 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 17,460 முறைப்பாடுகள் சீர் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் 31 வீதமான மின்தடைகள் சீர்செய்யப்பட்டுள்ளன என்றார்.

மின்தடைகள் குறித்து 1987 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கோ அல்லது CEBCare என்ற கையடக்கத்தொலைபேசி செயலி மூலமாகவோ முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக்க விமலரத்ன பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...