வர்த்தகம், விவசாயம், சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் – சபாநாயகருடனான சந்திப்பில் ஆராய்வு

Date:

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார்  (Reuven Javier Azar), சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய சபாநாயகரின் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

சுற்றுலா, விவசாயம், விஞ்ஞானம், டிஜிட்டல் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு மற்றும் மருத்துவத் துறைகள் உள்ளிட்ட பிரதான துறைகளில் இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை பத்தாவது பாராளுமன்றத்தில் ஸ்தாபிப்பதன் முக்கியத்துவத்தை தூதுவர் வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பௌத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, அதன் போதனைகள் உலக அமைதி மற்றும் சகவாழ்வை வளர்ப்பதற்கு எந்தக் காலத்துக்கும் பொருத்தமானது  எனத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர மற்றும் இலங்கைக்கான துணைத் தூதுவர் தினேஷ் ரொட்ரிகோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...