வாகன இலக்கத்தகடு விநியோகம்  தற்காலிகமாக இடைநிறுத்தம்

Date:

இலங்கையின் புதிய வாகனப் பதிவு செயல்முறையானது இலக்கத் தகடுகளின் (Number Plates) பற்றாக்குறையால் தாமதங்களை எதிர்கொள்வதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய வாகன உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில், பற்றாக்குறை காரணமாக வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் தாமதமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான தற்காலிக தீர்வாக வாகன எண்ணை உள்ளடக்கிய மற்றும் பதிவு செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தும் கடிதத்துடன் வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு திணைக்களம் தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த தற்காலிக நடவடிக்கை ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

நாடு முழுவதும் பலத்த மழை, காற்று தீவிரமடையலாம்:மக்கள் அவதானம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12...

சீரற்ற வானிலை: உயர் தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த....