இஸ்ரேல் பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

Date:

ஈடன் அலெக்சாண்டர் (Edan Alexander) என்ற  அமெரிக்கா பிராஜாவுரிமையுள்ள சியோனிச பணயக் கைதியை இன்று விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பணயக் கைதியை விடுவிக்க முடிவு செய்துள்ளதாக ஹமாஸ் இயக்கத்தின் அல்கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 19ம் திகதி இரு தரப்பினரிடையே போர் நிறுத்தத்தின்  ஒரு பகுதியாக, இருதரப்பிலும் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டு படிப்படியாக  கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வகையில், ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரரும், அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவருமான ஈடன் அலெக்ஸாண்டர் என்பவரை 580 நாட்களுக்குப் பிறகு விடுவிக்க ஹமாஸ் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) இந்த வாரம் மத்திய கிழக்கு செல்கிறார்.அதற்குள் அலெக்சாண்டர்  விடுவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அமைதி உடன்பாட்டை எட்டவும், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் சென்று சேரவும் அது வழியமைக்கலாம் என்று ஹமாஸ் கூறியது.

அமெரிக்க பணயக் கைதி  விடுவிக்கப்படுவதை உறுதிசெய்ய கத்தார், எகிப்து, துருக்கியே ஆகிய நாடுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்-ஹாயா (Khalil Al-Hayya) தெரிவித்தார்.

ஆதாரம் : Reuters

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...