இஸ்ரேல்-ஈரான் விவாதம் நடைபெறாமலேயே சபை ஒத்திவைப்பு

Date:

எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெற இருந்த நிலையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 05.30 வரை நடைபெறவிருந்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் நாளை காலை 09.30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த விவாதத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேராவால் ஒத்தி வைக்கப்பட்ட முன்மொழிவு கொண்டு வரப்பட்டது.
எனினும் அந்த முன்மொழிவு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில் அவர் சபையில் இருக்கவில்லை.
அதன் காரணமாக பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலியினால் நாடாளுமன்ற அமர்வை நாளை வரை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...