சிவஶ்ரீ சுந்தரராம குருக்களுக்கு கனடாவில் கௌரவம்…!

Date:

மதிப்பிற்குரிய சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் அவர்களுக்கு, அவரது தெய்வீக கிரியைகள் மற்றும் சமூகத்திற்கான அற்புத சேவையை பாராட்டி, “கவிச்செம்மல் கிரியாதிலகம்” எனும் கௌரவ பட்டம் வழங்கி பெருமையுடன் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 19 ஆம் திகதி, கனடா  மிசிசாகாவில் அமைந்துள்ள ஶ்ரீ ஹரிகரசுதன் ஐயப்பன் ஆலயத்தில், ஆலய அவையோர் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இந்த சிறப்புவிழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவில், சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், தமிழ் சமூக தலைவர்கள் மற்றும் பண்பாட்டு அமைப்பினர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் கிரியைகளை நினைவுபடுத்தும் விதமாக வழங்கப்பட்டது.

சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயா அவர்கள் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர்களுள் ஒருவராகவும், அனைத்து மதங்களிடையிலான ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்காக சிறப்பாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...