டெங்கு, சிக்குன்குன்யா நேய்களை கண்டறிய மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்!

Date:

அறிகுறிகள் மூலம்,  டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாதுயெனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது மிகவும் முக்கியம் எனவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபதிரன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய் பரவல் அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே இந்த நோய்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிக்குன்குன்யா மற்றும் டெங்கு காய்ச்சலின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் ஒரே விதமாகவே காணப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் வாந்தி போன்றவை ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக வைத்தியரை சந்தித்து உரிய சிகிச்சைப்பெற வேண்டுமெனவும் மேலும், சிக்குன்குன்யா நோய் பெரும்பாலும் உடல் வலியை ஏற்படுத்துவதால், வலியைக் குறைக்க வலி நிவாரணிகளை உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவற்றை உபயோகிப்பதால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையானதாக அமையும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள வைத்திய நிபுணர், காய்ச்சல் மற்றும் வலியைக் குறைக்க முடிந்தவரை பெரசிட்டமோல் மாத்திரைகளை மாத்திரம் பயன்படுத்துமாறும் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தண்ணீர், பழச்சாறு, கஞ்சி, ஜீவனி போன்றவற்றை அருந்துவதன் ஊடாக, நீரிழப்பைத் தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிகுறிகள் தோன்றினால், அது டெங்குவா? அல்லது சிக்குன்குன்யாவா? என்பதை சரியாகக் கண்டறிய முடியாது எனவும், தொடர்புடைய நோய்களைக் கண்டறிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிக்குன்குன்யா நோயால் பாதிக்கப்பட்ட பின்னர், சில நோயாளிகள் நீண்டகால மூட்டு வலி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும் என்பதால், இதற்கு முறையான சிகிச்சை தேவை என்றும், எனவே வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம் எனவும் விசேட வைத்திய நிபுணர் அதுல லியனபதிரன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...