பொசன் தினத்தை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

Date:

அரச பொசன் நிகழ்வை முன்னிட்டு அநுராதபுரத்தை அண்மித்த பகுதிகளில் 3,500 பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமைகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாவி மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் விசேட உயிர் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் சிலவற்றை ஈடுபடுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அநுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சுத்தப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கழிவுப்பொருட்களை அகற்றுவதற்காக 500 இற்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...