பொசன் தினத்தை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

Date:

அரச பொசன் நிகழ்வை முன்னிட்டு அநுராதபுரத்தை அண்மித்த பகுதிகளில் 3,500 பொலிஸ் அதிகாரிகளை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடமைகள் மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாவி மற்றும் நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் விசேட உயிர் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் சிலவற்றை ஈடுபடுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

அநுராதபுரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளை சுத்தப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கழிவுப்பொருட்களை அகற்றுவதற்காக 500 இற்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...