பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,000 தன்சல்கள் பதிவு

Date:

பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.

இந்த தானசாலைகளின் பொது சுகாதாரத் தரங்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

பொசன் தினத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்களை  தானசாலைகள ஊடாக வழங்குவது  இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பாரம்பரியமாகும் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

கொழும்பு – 944, கம்பஹா – 1,792, களுத்துறை – 977, கண்டி – 1,264, மாத்தளை – 812, நுவரெலியா – 352, காலி – 1,186,மாத்தறை – 1,021, அம்பாந்தோட்டை – 533, இரத்னபுரி – 1,097, கேகாலை – 922 ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கழிவு முகாமைத்துவம் ஆகியவற்றில் விசேட  கவனம் செலுத்தப்படும் எனவும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பொசன்  கொண்டாட்டத்தை உறுதி செய்வதாகவும் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...