உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் ஜேவிபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் சந்திப்பு

Date:

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் தற்போது சீனா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட்ட ஜேவிபியின் பிரதிநிதிக்குழு சீன கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸிஜியாங் (Zhejiang) மாகாண ஆளுநர் லியு ஜியோ (Liu Jie) கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்ற குழுவில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், தீப்தி வாசலகே, தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...