புத்தளம் ஸாஹிராவில் ஹிஜ்ரி புத்தாண்டு நிகழ்வுகள்..!

Date:

கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் பிரிவின் வழிகாட்டலின்படி, ஹிஜ்ரி 1447வது முஹர்ரம் புத்தாண்டு ஆரம்பமானதை முன்னிட்டு நாடெங்கும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 27ஆம் திகதி பல்வேறு கலாசார மற்றும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில், புத்தளம் ஸாஹிரா தேசியக்கல்லூரியில் நடைபெற்ற முஹர்ரம் புத்தாண்டு நிகழ்வில் புத்தளம் கல்வி வலயத்தின் புத்தளம் வடக்கு கல்விப் பணிப்பாளர், திருமதி அஸ்கா அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

நிகழ்வின் தலைமை பொறுப்பை பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எஸ். ரஸாத் அவர்கள் வகித்தார். இந்நிகழ்வின் பிரதான பேச்சாளராக பஹன மீடியா பிரைவேட் லிமிடெட்டின் பணிப்பாளர், அஷ்ஷெய்க், எம்.எஸ்.எம். அப்துல் முஜீப் (கபூரி) அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில், ஹிஜ்ரி புத்தாண்டின் முக்கியத்துவம், அது கற்றுத் தரும் பாடங்கள் குறித்து விளக்கினார். முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுதல், வாழ்க்கையில் குறிக்கோள்களை அடைவதற்கு தியாகத்தின் அவசியம், சமூக நீதியை நிலைநாட்டுவதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பிற சமூக உறுப்பு குழுக்களின் பங்கு போன்ற அம்சங்களை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், கிளைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்டோர் திரளாகக் கலந்து சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...