தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினராகிறார் சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர்!

Date:

முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபைக்கு இறகுச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டது.

இந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர் கட்சியினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் தெஹிவளை, கல்கிஸ்ஸை மற்றும் ரத்மலான பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ஒரே அணி இறகுகள் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் செயற்திட்டத்தினை அடிப்படையாக வைத்து மாநகர சபை அமர்வுகளில் சமூக நீதிக் கட்சி பல முன்மொழிவுகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் பிரச்சாரங்களிலும், விஞ்ஞாபனத்துக்கான கொள்கை வகுப்பதிலும் முன் நின்று செயற்பட்ட சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி இறுதி இரண்டு வருடங்களும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையை அலங்கரிப்பார் என்று கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...