“என் கணவர் அப்பாவி”: அரசு நிதியில் இருந்து ரூ.53 மில்லியன் மோசடி செய்த குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்பட்ட மஹிந்தானந்தாவின் மனைவி..!

Date:

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவி செனானி ஜெயரத்னா, அண்மையில் ஒரு பெரிய ஊழல் வழக்கில் தனது கணவர் தண்டிக்கப்பட்டதை கண்டித்து சமூக ஊடகத் தளத்தில்  பதிவொன்றை இட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேயின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் வழியாகப் பகிரப்பட்ட ஒரு நீண்ட பதிவில் அவர்,

தனது கணவர் நிரபராதி என்றும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி  தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சட்ட செயல்முறை அரசியல் ரீதியாக செல்வாக்கு செலுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

அதேநேரம், நீதி அமைச்சரின் அண்மைய கருத்தையும் அவர் கேள்வி எழுப்பினார், தேசிய மக்கள் சக்தி ஆட்சி  இல்லாவிட்டால் அத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

தனது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அரசு நிதியில் இருந்து ரூ.53 மில்லியன் மோசடி செய்ததாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொது நிதியைப் பயன்படுத்தி கேரம் போர்டுகளை விநியோகித்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் அடங்கும்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...