ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு: இஸ்ரேல்–ஈரான் போர் நிலவரம் குறித்து கவனம்

Date:

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

எந்தவொரு தீவிரப் போராட்டமும் இலங்கை உட்பட பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதருக்கு விளக்கியதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...