உடுதும்பர பிரதேச சபையிலும் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி

Date:

கண்டி மாவட்டத்தில் உடுதும்பர பிரதேச சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது.

வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற உடுதும்பர பிரதேச சபையின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் விபுல பண்டார சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் உடுதும்பர பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளிலிருந்தும் தலா 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே நேற்று பிரதேச சபைத் தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் அக்குரணை பிரதேச சபை மற்றும் கடுகண்ணாவை நகர சபை என்பவற்றிலும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...