பொலிஸ் ஊடகப் பேச்சாளராக எப். யு. வுட்லர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்திலுள்ள பகின்க்ஹெம்சயர் (Buckinghamshire) பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்றுக் கொண்ட அவர், இலங்கை பொலிஸில் கடமையாற்றும் போது 2015 டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான முதுகலைப் பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
இந் நாட்டின் 30 வருட காலமாக நடைபெற்ற கொடூர யுத்த காலத்தின் போது யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாகவும், நீர்கொழும்பு தலைமைப் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகவும், வெள்ளவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், தொம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும், ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளார்.