ஓட்டமாவடி பிரதேச சபை SLMC வசமானது; தவிசாளராக SJB பைறூஸ் தெரிவு

Date:

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

இதில், ஓட்டமாவடி -2 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எச்.எம்.பைறூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளித்து தவிசாராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரதி தவிசாளராக மாஞ்சோலை – பதுரியா நகர் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எச்.நுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி 8 ஆசனங்கள் ஆதரவுடன் காணப்படுவதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9 ஆசனங்கள் ஆதரவுடன் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...