நிறுவன விதிகளை மீறியதால் ரவி குமுதேஷ் பணி இடைநீக்கம்!

Date:

அரசாங்க மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ரவி குமுதேஷ் நிறுவன விதிகளை மீறி 2024 பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த இடைநீக்கம் அவர் வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாளான 10.10.2024 முதல் அமுலுக்கு வரும் என்றும், இடைநீக்க காலத்தில் அவருக்கு சம்பளமோ அல்லது கொடுப்பனவுகளோ வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு அவர் விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...