காசா முறுகலை 2 வாரங்களுக்குள் முடித்து வைக்கவும் ஆபிரகாம் உடன்படிக்கையை சிரியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் விஸ்தரிக்கவும் டிரம்பும்-நெதன்யாகுவும் பேச்சு: இஸ்ரேல் ஹயோம் பத்திரிகை தகவல்

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, மூலோபாய விவகாரங்களுக்கான அமைச்சர் டொன் டேமர் ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடலொன்று ஈரானின் அணு உலைகள் மீதான தாக்குதலுக்கு பின்னர் நடைபெற்றுள்ளதாக ‘இஸ்ரேல் ஹயோம்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உரையாடலின் போது மத்தியக் கிழக்கு சமாதானத்திற்காக பல்வேறு திட்டங்கள் கலந்துரையாடப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

காசா முருகலை இருவார காலத்திற்குள் முடித்து வைக்கவும் ஹமாஸை நீக்கிவிட்டு அதற்கு பகரமாக காசா பகுதியை நிர்வகிப்பதற்கு எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட நான்கு அரபு நாடுகளை நியமிப்பது எனவும் எஞ்சியிருக்கின்ற ஹமாஸ் உறுப்பினர்களை வேறு நாடுகளுக்கு நாடு கடத்தவும் பணயக் கைதிகளை மீட்டெடுப்பதெனவும் உரையாடப்பட்டுள்ளது.

உலகில் குடியேற்றவாசிகளை ஏற்றுக்கொள்ளும் பல நாடுகளுக்கும் காசா மக்கள் அனுப்பி வைக்கப்படுவர். ஆபிரகாம் ஒப்பந்தத்தினை இஸ்ரேலை அங்கீகரித்து உத்தியோகப்பூர்வ உறவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும் வகையில் சிரியா சவூதி அரேபியா மற்றும் இன்னும் பல அரபு, முஸ்லிம் நாடுகளுக்கும் விரிவாக்கப்படும்.

பலஸ்தீன அதிகாரசபை சீர்திருத்தப்படுவதைப் பொருத்து இரு நாடுகள் தீர்வுக்கு இஸ்ரேல் தனது விருப்பதை தெரிவிக்கும்  எனப் பல விடயங்கள் இக்கலந்துரையாடலில் பேசப்பட்டதாக ‘இஸ்ரேல் ஹயோம் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியினை இஸ்ரேலின் பிரதமரின் அலுவலகம் ஏற்றுக்கொள்ளவோ அல்லது வெள்ளை மாளிகை மறுக்கவோ இல்லை.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...