‘ஹிஜ்ரி வருடத்திற்கான ஆளுமை’ விருது: சவூதி அரேபியாவின் ஹஜ் சேவைகளை பாராட்டி, மலேசிய மன்னர் கௌரவிப்பு

Date:

ஹஜ்ஜாஜிகளுக்காக சவூதி அரேபியா அரசு மேற்கொள்ளும் சிறப்பான பணிகள் மற்றும் நவீன முயற்சிகளை மதிப்பளிக்கும் வகையில், மலேசிய மன்னர் இப்ராஹிம் பின் இஸ்கந்தர், சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சர் டாக்டர் தௌஃபீக் அல்-ரபியாவுக்கு ‘ஹிஜ்ரி வருடத்திற்கான ஆளுமை’ என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்தார்.

இந்த விருது, ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு அதிகாரப்பூர்வ விழாவில் வழங்கப்பட்டது. “ஒரு குடிமை தேசத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழா, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் மத விவகார அமைச்சர் டாக்டர் முகமது நயீம் பின் ஹாஜி மொக்தார் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விருது இஸ்லாமிய விழுமியங்களைப் பேணுவதிலும், முஸ்லிம் உலகத்திற்கான சேவைகளிலும் அவர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டப்படுகின்றன.

ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளை நவீனமயமாக்குவதில், உலகெங்கும் உள்ள யாத்ரீகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் சவூதி அரசின் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியுள்ள டாக்டர் அல்-ரபியாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...