சிவஶ்ரீ சுந்தரராம குருக்களுக்கு கனடாவில் கௌரவம்…!

Date:

மதிப்பிற்குரிய சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் அவர்களுக்கு, அவரது தெய்வீக கிரியைகள் மற்றும் சமூகத்திற்கான அற்புத சேவையை பாராட்டி, “கவிச்செம்மல் கிரியாதிலகம்” எனும் கௌரவ பட்டம் வழங்கி பெருமையுடன் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 19 ஆம் திகதி, கனடா  மிசிசாகாவில் அமைந்துள்ள ஶ்ரீ ஹரிகரசுதன் ஐயப்பன் ஆலயத்தில், ஆலய அவையோர் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இந்த சிறப்புவிழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவில், சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், தமிழ் சமூக தலைவர்கள் மற்றும் பண்பாட்டு அமைப்பினர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் கிரியைகளை நினைவுபடுத்தும் விதமாக வழங்கப்பட்டது.

சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயா அவர்கள் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர்களுள் ஒருவராகவும், அனைத்து மதங்களிடையிலான ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்காக சிறப்பாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...