செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் விரட்டியடிப்பு

Date:

யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா விளக்கு“ இறுதி நாள் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

செம்மணியில் போராட்டக்களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர்.

மதியம் 1 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர்.

இதன் பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டார்.

இதேவேளை அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.  விரைவாக குறித்த இடத்தை விட்டு சந்திரசேகரன் வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி காத்திருந்த நிலையில் அவரையும் சூழ்ந்து கொண்டோர் அவரையும் விரட்டியடித்தனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...