தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று ஆரம்பம்!

Date:

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையில், ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் மாதத்தில் 5,175 டெங்கு நோயாளிகளும், மே மாதத்தில் 6,025 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக, 16 சுகாதார பிரிவுகளில் 95 பகுதிகளை உள்ளடக்கிய சிறப்பு நுளம்பு கட்டுப்பாட்டு திட்டம் மே 19 முதல் 24 வரை செயல்படுத்தப்பட்டது.

இதன்போது 128,824 வளாகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் பெய்த தொடர் மழை காரணமாக டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது வாரத்திற்கு சுமார் 1,500 டெங்கு நோயாளிகள் பதிவாகி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...