நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச கல்வி மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மலுக்கு சிறப்பு கௌரவம்

Date:

நேபாள நாட்டின் தலைநகரமான காத்மண்டு மெட்ரோபொலிடியன்  நகரத்தில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச கல்வி மாநாட்டில், இலங்கையின் புத்தளத்தைச் சேர்ந்த MH School of Excellence பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் சிறப்புரையாற்றவுள்ளார்.

‘கல்வித்திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் புதுமைகளை செயல்படுத்தல்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளார். இந்த மாநாடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் அனுபவங்களையும் புதிய யோசனைகளையும் பகிரும் ஒரு  மேடையாக அமைகிறது.

இந்த அமைப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜ்மலுக்கு சிறப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது. இச்சிறப்பு வாய்ந்த நிகழ்வில் அவரது பங்களிப்பு, நாடுகளுக்கிடையிலான கல்வி ஒத்துழைப்பையும், கல்வித்துறையில் புதுமைகளை ஊக்குவிக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

பொதுமக்களைப் பீதியடையச் செய்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அனர்த்தம் ஏற்பட்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் உண்மைக்கு புறம்பான...

புத்தளத்தில் நிவாரணப் பணிக்கான மையமொன்றினை நிறுவ ஏன் தாமதம்?

நாட்டின் பல பகுதிகளில் சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

மகாவலி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணி...

வெள்ளத்தில் மூழ்கிய சிலாபம் பொது வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது!

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட சிலாபம் பொது வைத்தியசாலை, மறு அறிவிப்பு வரும்...