நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச கல்வி மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மலுக்கு சிறப்பு கௌரவம்

Date:

நேபாள நாட்டின் தலைநகரமான காத்மண்டு மெட்ரோபொலிடியன்  நகரத்தில் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச கல்வி மாநாட்டில், இலங்கையின் புத்தளத்தைச் சேர்ந்த MH School of Excellence பாடசாலையின் அதிபர் ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் சிறப்புரையாற்றவுள்ளார்.

‘கல்வித்திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலில் புதுமைகளை செயல்படுத்தல்’ என்ற தலைப்பில் அவர் உரையாற்ற உள்ளார். இந்த மாநாடு, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் அனுபவங்களையும் புதிய யோசனைகளையும் பகிரும் ஒரு  மேடையாக அமைகிறது.

இந்த அமைப்பில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அஜ்மலுக்கு சிறப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது. இச்சிறப்பு வாய்ந்த நிகழ்வில் அவரது பங்களிப்பு, நாடுகளுக்கிடையிலான கல்வி ஒத்துழைப்பையும், கல்வித்துறையில் புதுமைகளை ஊக்குவிக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...